Search This Blog

Saturday, September 18, 2010

எதுவுமில்லை மிச்சம்!

உன் அமைதியில் அழிந்த
என் ஆர்வம்.
உன் பார்வையில் மறைந்த
என் முயற்சி.
உன் சிரிப்பில் தொலைத்த
என் சுயம்
உன் கருத்தால் மறந்த
என் இலட்சியம்
உன் நினைவில் சென்ற
என் தனிமை
உன் ஆசையில் சங்கமித்த
என் ஆன்மா
உன் உள்ளத்தில் ஒன்றிய
என் உயிர்
உன் காதலால் வாழ்ந்த
என் கணங்கள்
ஏதேதோ நினைத்து
எதுவுமில்லை
நீயும் நானும் வாழ்ந்த
வாழ்க்கையின் மிச்சம்.
தொலைப்பதுதான்
வாழ்க்கை என்று
துலங்கியது இப்போது!
மீண்டும் தொடங்கிவிட்டேன்
பயணத்தைத்
தொலைப்பதற்கு!

No comments:

Post a Comment