Search This Blog

Saturday, September 11, 2010

மழை கேட்கும் மின்னல்

உன் தோளில் முடங்கி
மார்பில் தோய்ந்து
உன் வன்விரல்
என் மென்கூந்தல்
வருடிவிட
தூங்கப் போகிறேன்
நான் ,
கனவில் மட்டுமே
நீ வருவதால்!
நினைவாக
என்று வருவாய்?
காதலோடு கேட்கின்றேன்,
மழை கேட்கும் மின்னலாய் !

No comments:

Post a Comment