Search This Blog

Sunday, September 12, 2010

நீயும் ... நானும்...

உன்னோடு சேர்ந்து நடந்த
பாதை மட்டுமே
மொத்த உலகமும்
நான்
வாழ்ந்த நாட்கள்!
மை தீர்ந்த பேனா
என்று தெரிந்தும்
தூக்கிப் போட மனமின்றி
உயிரற்ற பேனாவோடு
தொடர்ந்து செல்கிறது
என் எழுத்து!
எதிர்பாராது நடக்கும்
எண்ணற்ற நிகழ்வுகள்
என்
அனுமதியின்றியே
நம்
கடந்த காலத்திற்குள்
என்னைக்
கட்டிப் போட்டுக்
காயப்படுத்துகிறது!
என்னோடு நீயும்
உன்னோடு நானும்..
கடற்கரை…
கடைவீதி…
இப்படி
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்
நீ… நான்….
உள் மூச்சை
இழுக்கும்போதெல்லாம்
உன் மூச்சைத் தேடுகிறேன்!
நான் நினைப்பது போல
நீயும் நினைப்பாயா?
ஆராய்கிறேன்…
முடிவில்லை…?
செம்புலப் பெயல்நீர் என்று சொன்ன
உன் காதல்
இல்லை … இல்லை
நம் காதல்,
இன்று
நீர் வேறு… மண் வேறாய்….
தனித் தனியாய்….
இது எப்படி?

No comments:

Post a Comment