Search This Blog

Sunday, September 12, 2010

எதிர்பார்ப்பு

எங்கே நான் போனாலும்
எவர் எதிரே வந்தாலும்
உன் சாயல்
அதில் தெரிந்தால்
மனதிற்குள் மழைக்காற்று!
பின்புறம் பார்க்கும்போதே
உன் முகமாக இருக்காதா
என்ற என் எதிர்பார்ப்பு!
ஏனடா இந்தத் தொல்லை?
சுவாசிக்க மறந்திருந்தாலும்
யோசிக்க மறந்ததில்லை
என்னருகில் நீயிருந்த
இன்பமான பொழுதுகளை!
யாசிக்க மனமில்லை என்றாலும்
வாசிக்கின்றேன் தினந்தோறும்
உன் பெயரை
என் இதழில்!

No comments:

Post a Comment