Search This Blog

Saturday, September 11, 2010

வாழ்க்கைப் புள்ளி

கூப்பிடாமலே வந்து விழும்
கண்ணீரைக்
கூட்டுக்குள் அடைக்கின்றேன்
தனியாக நிற்கும்
ஆயுள் தண்டனையை
அனுபவிக்கக் கற்றுக் கொண்டதால்,
சுடும் நிஜங்களே
இன்று
எனக்குச் சுயத்தைக் காட்டியது.
உணர்வற்ற உடலில்
ஊசலாடும் என்னுயிர்,
”நான் வாழ வேண்டும் ” என்றது.
”நீயா” என்றேன்.
”யாருக்காகத் தொலைக்கப் போகிறாய்
உன் வாழ்வை” என்றது.
”நானிருக்கிறேன் உன்னோடு” என்றது.
”நான் நான் மட்டும் தான் நிஜம்” என்றது.
புள்ளி புரிந்துவிட்டதால்
கோலத்தின் அழகை
இரசிக்கின்றேன் நானும்!

No comments:

Post a Comment