Search This Blog

Sunday, September 12, 2010

அம்மாவோடு நான்...

அம்மா!
உன்
கற்பனைச் சிறகுகளுக்குள்
வந்த சில
கவிதைகளைப் போல்
உன்
கருச் சிறைக்குள்
வந்த
என்னையும்
காகிதமாய் கிழிக்கின்றாயே!
உன்
கவிதைகளைப் புத்தகமாக
வெளியிடும் நீ,
என்னை மட்டும்
குழந்தையாக
வெளிவிட மறுப்பதேன்?
மருத்துவரின் கூராயுதம்
என் தளிர் உடலை
பதம் பார்க்க
இரத்தக் குளம்பாய்
நான்
பூமி காண…
உன் சித்தம் புரியவில்லை
அம்மா!
உருவாகி வந்தாலும்
தினம் வடியும்
இரத்தம்
என் இதயத்தில்
என்பதால்
ஒரு நாள் மட்டும்
பொறுத்துக் கொள் என்று…?
உலகம் பார்க்காமல்
உறங்கச் சொல்கிறாய்!
புரிகிறது அம்மா,
உன்
வேதனையும் விம்மலும்!
நானும் பெண் தான்!

No comments:

Post a Comment