Search This Blog

Friday, September 10, 2010

சுயம்

என்னிடம்
அடைக்கலமாய் இருந்த
அழுகைகூட
விடைபெற்றுச் சென்று
வெகுநாட்கள்
ஆகிவிட்டது!
தூக்கத்தில்கூட
கனவாய் மிரட்டிய
என் துக்கம்
கரைந்து போய்
காலங்கள் கடந்துவிட்டது!
எங்கு சென்றாலும்
நிழலாய் தொடர்ந்த
நினைவுகளின் வலிகூட
குறைந்து போனது
கொஞ்ச நாட்களில்!
இதயம் சுமந்த
சோகத்தின் சுமைகளை
இறக்கி வைத்துப்
பல நாட்கள் ஆகிவிட்டது!
இப்போது
குப்பைகள் அகற்றப்பட்ட
ஈர மணலாய்
விதைக்காகக் காத்திருக்கிறது
என் உள்ளம்!
அதனால்
தொலைந்துவிட்டது என்று நினைத்த
என் சுயம்
துளிர்விட்டது மெல்ல!

No comments:

Post a Comment