Search This Blog

Sunday, August 15, 2010

எப்போது...?

தன் இயல்பைக் காட்ட
மரமும் செடியும் கொடியும்
தயங்கவில்லை!
பெண்ணே!
நீ மட்டும்
உன் திறமை, உன் ஆசை, உன் வெறுப்பைக்
காட்டத் தயங்குவதேன்?
ஈரறிவு உயிர்களுக்குள்ள
இயல்பான வெளிப்பாடு
உன்னிடமிருந்து வெளிப்படுவது
எப்போது?

No comments:

Post a Comment