Search This Blog

Sunday, August 1, 2010

அன்பிற்கும் உண்டோ...?

விளையாட்டாய் ஓடி வந்து
பக்கத்தில் நின்று
ஓரத்தில் கிடந்த வைக்கோலை
ஒரு கை எடுத்து
வாய் அருகில் கொடுத்துவிட்டு
புண்ணாக்குத் தண்ணீரைக்
குடிக்க வைத்தச்
சின்னச் சின்னப் பொழுதுகளை
நினைத்துப் பார்த்து...
மாட்டுத் தரகர் வந்து
கை மீது துணி போட்டு
காசு பேசி உன்னைக்
கூட்டிப் போக வந்தபோது
அழுதழுது தீர்த்தாயே தோழீ!
ஆண்டுகள் நாற்பது கடந்துவிட்டன...
இன்று
என் கையால்
வகை வகையாய் கறி சமைத்து
உண்டு களித்துவிட்டுச் சென்றவர்கள்
உதிர்த்துவிட்ட வார்த்தைகளைக் கேட்டபோது
கண்ணீரைக் காட்டிய
உன் முகம் மட்டும்
வந்து போகிறது அவ்வப்போது!

No comments:

Post a Comment